Sunday 3 May 2020

ராஜீவ் கொலை வழக்கு-ஆயுள் தண்டனை கைதி முருகனின் தந்தை யாழ்ப்பாணத்தில் காலமானார்.. ...

யாழ்ப்பாணம்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகனின் தந்தை வெற்றிவேல், இலங்கை யாழ்ப்பாணத்தில் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் முருகன். இவரது மனைவி நளினியும் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கிறார். இவர்களுக்கு சிறையில் பிறந்த மகள் தற்போது லண்டனில் உள்ளார். Rajiv case convict Murugans father Passes away in Srilanka ஈழத் தமிழரான முருகனின் தந்தை வெற்றிவேல் இலங்கை யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தார். முதுமை மற்றும் புற்றுநோயால் முருகனின் தந்தைக்கு அண்மைக்காலமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தது. இதனால் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தந்தையுடன் பேசுவதற்கு தமிழக அரசிடம் அனுமதி கேட்டு முருகன் விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் இன்று வெற்றிவேல், யாழ்ப்பாணம் சாவகச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

No comments: