Saturday 21 March 2020

நீயன்றி யாரழிப்பர் கொரோனாவை!

நீயன்றி யாரழிப்பர் கொரோனாவை! ----------------------------------- தரணியின் முடிவு வந்துற்றதோ கொரோனா தானாக வந்துற்றதோ தனிமையின் வாட பேரணியாய் பயந்து மக்கள் எலோரும் பரிதவிக்க காரணந்தான் ஏதிறைவா நீயறிவாய்! ^^^^^^^^^ ^^^^^^^^^ உன்னருஞ் செயல்களில் நாட்டமின்றி நிலத்தார் உயர்ந்தே நின்றிட பற்பல ஆற்றினர் பேராய் சின்னவருஞ் சாகின்றார் எந்நேரமோ எனச்சொல்லி சகமனைத்தும் படைத்தோனோ நீயன்றி யாரறிவார்? ^^^^^^^^^ ^^^^^^^^^ விடப்பல்லுடை நாகமும் நீவிலக்கிய பல்லுயிரும் விந்தை மனிதர் உண்டனரே அதனாலோ திடமாக ஏதென்று நீயன்றி ஆரறிவார் திடமான மனதுடன் இருந்திடச் செய்யிறைநீ! ^^^^^^^^^ ^^^^^^^^^ பூதலத்தில் பயங்கரமாய் பற்பலநிகழ்த்தினையே படைத்தவன் எனைப்பணிந்து நடவென்று நீயேதான் காதினிலின்னும் ஏறவிலையே கயிறுனது பலமென்று காணவிலையே கதறுகிறார் முகமூடியோ டின்றுதான்! ^^^^^^^^^ ^^^^^^^^^ சீனத்து உயிர்களொடு பன்னாட்டு உயிர்களெலாம் சீவனமாய் தொற்றுகிறதே கொரோனோ வைரசுதான் ஊனமாய் மானுடந்தான் கைகுலுக்கவும் அஞ்சுகிறார் உதறித்தள்ளுகிறார் உண்மை நட்பையுந்தான் இறைவா! ^^^^^^^^^ ^^^^^^^^^ சுத்தத்தொடு மறைத்தலின் வனப்புந்தான் அழகாக சாந்தி நபிசொன்னாரே நகைத்தனர் பல்லோர்தான் சுத்திசெய்து கரங்களைத்தான் இல்லத்து இருங்களென்று சொன்னமொழி வாழுதே இறைவா நீபெரியோன்! ^^^^^^^^^ ^^^^^^^^^ பாரெங்கும் கடவுள் ஆசிக்காய் ஏங்குதேயல்லாஹ் பந்தாடும் வைரசுக்கு முடிவுகொடு உன்கருணையால் சீரெங்கும் உன்னன்பின்றி சிதைந்துவிடும் சகமெங்கும் சாக்காடாகிவிடும் அழித்தொழி பேரிறை கொரோனாதான்! ^^^^^^^^^ ^^^^^^^^^ -மதுராப்புர, கலைமகன் பைரூஸ் (உலகக் கவிஞர்கள் தினம் 21.03.2020) By tamil tv

No comments: