Sunday 3 May 2020

ராஜீவ் கொலை வழக்கு-ஆயுள் தண்டனை கைதி முருகனின் தந்தை யாழ்ப்பாணத்தில் காலமானார்.. ...

யாழ்ப்பாணம்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகனின் தந்தை வெற்றிவேல், இலங்கை யாழ்ப்பாணத்தில் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் முருகன். இவரது மனைவி நளினியும் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கிறார். இவர்களுக்கு சிறையில் பிறந்த மகள் தற்போது லண்டனில் உள்ளார். Rajiv case convict Murugans father Passes away in Srilanka ஈழத் தமிழரான முருகனின் தந்தை வெற்றிவேல் இலங்கை யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தார். முதுமை மற்றும் புற்றுநோயால் முருகனின் தந்தைக்கு அண்மைக்காலமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தது. இதனால் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தந்தையுடன் பேசுவதற்கு தமிழக அரசிடம் அனுமதி கேட்டு முருகன் விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் இன்று வெற்றிவேல், யாழ்ப்பாணம் சாவகச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

கிம் தோன்றிய அடுத்த நாளே.. எல்லையில் தென்கொரியாவுடன் துப்பாக்கிச் சூடு நடத்திய வடகொரிய ராணுவம் By m.waseem.t.m

3 வாரங்களுக்கு பின்னர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பொது இடத்தில் தோன்றிய அடுத்த நாளே எல்லையில் வடகொரியா ராணுவமும் தென் கொரிய ராணுவமும் துப்பாக்கிச் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டின் தந்தை என அழைக்கப்படும் அவரது தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து கிட்டதட்ட 3 வாரங்களுக்கு அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர் இறந்துவிட்டார் என்றும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்றும் பல்வேறு யூகங்கள் ரெக்கை கட்டிப் பறந்தன. மேலும் அவர் உயிருடன்தான் இருக்கிறார். அவரால் எழுந்து நிற்க முடியாத அளவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுவிட்டது என கூறி வடகொரியாவின் அடுத்த அதிபர் யார் என அளவிற்கு ஊடகங்கள் அலசி வந்தன. தீயாக பரவிய வதந்தி.. வீறு நடைபோட்டு வந்த கிம் ஜோங் உன்.. 21 நாட்களுக்கு பின் என்ன பேசினார் தெரியுமா? கபாலி ஆலை திறப்பு நிகழ்ச்சி இந்த நிலையில் கபாலி படத்தில் வரும் ரஜினிகாந்தை சொல்வதை போல் 'திரும்பி வந்துட்டேனு சொல்லு' என எதிரி நாடுகளுக்கு சொல்லும் விதமாக அவர் கெத்தாக நேற்றைய தினம் ஒரு ஆலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆரவாரம் துப்பாக்கி இதை அந்நாட்டு மக்கள் கை தட்டி வரவேற்று ஆரவாரம் செய்தனர். கிம் அந்நாட்டு மக்களுக்கு கடவுள் மாதிரி என்பதால் அங்கிருந்து அவருக்கு இத்தனை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கிம் தோன்றிய அடுத்த நாளே தென் கொரியா நோக்கி வடகொரிய வீரர்கள் எல்லையில் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். பதிலுக்கு தென்கொரிய வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர். உடல்நிலை துப்பாக்கி கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்த போதும் தென்கொரியா அதை மறுத்தது. இந்த நிலையில் தென் கொரியா மீது வடகொரியா ஏன் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது என்பதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து தென் கொரிய நாட்டின் ராணுவ படை இணை தளபதி கூறுகையில் தென் கொரிய ராணுவ முகாம்கள் மீது வடகொரியா பல முறை துப்பாக்கியால் சுட்டது. தென்கொரிய ராணுவம் துப்பாக்கி எனினும் தென் கொரிய ராணுவத்தினருக்கு எந்த வித காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. இதற்கு பதிலடியாக நாங்கள் இருமுறை துப்பாக்கியால் சுட்டோம். பின்னர் அவர்களுக்கு எச்சரிக்கையையும் விடுத்தோம். இவர்கள் திடீரென எங்கள் நாட்டு ராணுவத்தினர் மீது துப்பாக்கியை சூட்டை நடத்தியது ஏன் என்பது தெரியவில்லை என்றார். ஒப்பந்தம் போர் ஒப்பந்தம் 1953-ஆம் ஆண்டு இரு தரப்பினரிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. எனினும் இரு நாடுகளும் தொழில்நுட்ப ரீதியில் சண்டையிட்டுக் கொண்டு வருகின்றன. அந்த போர் ஒப்பந்தத்தின் போது இரு நாட்டுக்கும் இடையே வரையறுக்கப்பட்ட எல்லை பகுதிகளில் கண்ணி வெடிகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ராணுவ பதற்றம் துப்பாக்கிச் சண்டை எல்லையில் இரு நாடுகளுக்கிடையே உள்ள ராணுவ பதற்றத்தை தணிக்க கடந்த 2018-ஆம் ஆண்டு பியாங்கியாங்கில் நடந்த ஒரு மாநாட்டில் கிம்மும் தென் கொரிய அதிபர் மூன் ஜோவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. பெரும்பாலான ஒப்பந்தங்களின் படி வடகொரியா நடந்து கொள்ளாததால் பியாங்கியாங்குடனான தொடர்பை சியோல் பெருமளவு துண்டித்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கிம் ஜாங் உன் தோன்றிய அடுத்த நாளே இது போன்ற துப்பாக்கிச் சண்டையால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது... #Kim_jong_un

Saturday 2 May 2020

சீனாவை பயமுறுத்தும் ட்ரம்ப்! எதிர் வினையாக எகிறும் தங்கம் விலை! By. M.WASEEM.T.M

ஏற்கனவே உலகில் கொரோனா வைரஸ் போதுமான அளவுக்கு குடைச்சல்களைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. போதாக் குறைப்பு அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வேறு அவ்வப் போது குட்டையைக் குழப்பிக் கொண்டு இருக்கிறார். அந்த வரிசையில் இப்போது புதிதாக இன்னொரு விஷயத்தைச் சொல்லி, ஒட்டு மொத்த உலகத்துக்கும் பகீர் கிளப்பி இருக்கிறார். அப்படி என்ன சொன்னார்? அமெரிக்க சீன பிரச்சனை அமெரிக்க சீன பிரச்சனை உலகிலேயே கொரோன வைரஸ் அதிக மக்களை பாதித்து இருப்பது அமெரிக்காவில் தான். அதோடு இறந்தவர்கள் எண்ணிக்கையிலும் அமெரிக்கா தான் முன்னணியில் இருக்கிறது. சீனா, சரியாக கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவில்லை என்கிற ஒரே காரணத்தால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் அடிக்கடி வாய்க்கால் தகராறு நடந்து கொண்டு இருக்கிறது. வர்த்தகப் போர் வர்த்தகப் போர் இதற்கு மத்தியில் 2018-ம் ஆண்டில் இருந்து நடந்து கொண்டு இருக்கும் வர்த்தகப் போருக்கு போட்ட டிரேட் டீல் வேறு பஞ்சாயத்துக்கு மத்தியில் வந்து போகிறது. சில வாரங்களுக்கு முன்பு தான், அமெரிக்கா, சீனா முறையாக டிரேட் டீலில் சொல்லி இருப்பது போல அமெரிக்க பொருட்களை வாங்க வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி அமெரிக்க பொருட்களை வாங்க மறுத்தால், மொத்த டிரேட் டீலையும் ரத்து செய்து விடுவேன் என மிரட்டினார் அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகள் சீனாவுக்கு எதிராக சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க, அமெரிக்கா ஆலோசித்து வருவதாக இரண்டு அமெரிக்க அதிகாரிகளே சொல்லி இருப்பதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்த ஆலோசனைகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரை இன்னும் போகவில்லை எனவும் சொல்லி இருக்கிறார்களாம். ட்ரம்ப் கருத்து ட்ரம்ப் கருத்து 'அமெரிக்காவும் சீனாவும் ஒரு டிரேட் டீலை ஒப்புக் கொண்டு இருக்கிறது. அதன் படி சீனாவும் அமெரிக்காவிடம் இருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு இருக்கிறது. ஆனால் அது இப்போதைக்கு இரண்டாம்பட்சமாகிவிட்டது. கொரோனா தான் முதல் விஷயமாக இருக்கிறது' என பத்திரிகையாளர்களிடம் சொல்லி இருக்கிறார் ட்ரம்ப். கூடுதல் வரி கூடுதல் வரி மேற்கொண்டு, அமெரிக்கா, சீனாவுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன்களை நிறுத்திவிடுமா..? எனக் கேள்வி எழுப்பிய போது 'நான் அதை வேறு வழியில் செய்வேன். கூடுதல் பணத்துக்கு, கூடுதலாக வரி விதிப்பேன்' எனச் சொல்லி ஒட்டு மொத்த உலக பொருளாதாரத்தையும் கலங்கடிக்கும் விதத்தில் பேசி இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். பின்ன உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகள் கூடுதல் வரி விதித்து விளையாடினால் உலக பொருளாதாரம் அடி வாங்கத் தானே செய்யும்..? பங்குச் சந்தைகள் சரிவு பங்குச் சந்தைகள் சரிவு ட்ரம்ப் கூட்தலாக வரி விதிப்பேன் என்கிற வார்த்தையை விட்ட்து தான் தாமதம்... மே 01, 2020 நேற்று அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தை 3.20 % வீழ்ச்சி கண்டது. லண்டனின் எஃப் டி எஸ் இ பங்குச் சந்தையும் 2.34 % வீழ்ச்சி கண்டன. பங்குச் சந்தைகள் வீழ்ச்சி காணத் தொடங்கினாலே மக்கள் உஷாராக தங்கத்தில் பணத்தை முதலீடுச் செய்யத் தொடங்கிவிடுகிறார்கள். அது தான் சமீபத்திலும் நடந்து இருக்கிறது. தங்கம் விலை சர்வதேச அளவில், கடந்த 30 ஏப்ரல் 2020 அன்று 1,686 டாலரைத் தொட்டு வர்த்தகமான ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, நேற்று மே 01, 2020 அன்று 1,700 டாலரைத் தொட்டு இருக்கிறது. இன்று 1,705 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் ட்ரம்பின் கூடுதல் வரி அச்சுறுத்தல். கடந்த ஏப்ரல் 23 முதல் விலை இறங்கிக் கொண்டிருந்த தங்கம் விலை, ட்ரம்பின் வார்த்தைகளால் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கி இருக்கிறது. சென்னையில் தங்கம் இன்று சென்னையில் 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 46,400 இந்திய ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது. ஆக ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,640 இந்திய ரூபாயை தொட்டு இருக்கிறது. நம்மால் என்ன செய்ய முடியும்... 'ட்ரம்ப் சார் எதையும் கொஞ்சம் யோசிச்சு பேசுனீங்கன்னா எல்லாருக்கும் நல்லது.. கொஞ்சம் பாத்து பண்ணுங்க' என்று வேண்டுகோள் தான் வைக்க முடியும். போகிற போக்கில் தங்கத்தை எல்லாம் படமாகத் தான் பார்க்க முடியும் போலிருக்கிறது.....! Trump Frightening China! Gold Price By. M.WASEEM.T.M The coronavirus is already making enough noise in the world. US President Donald Trump has been puzzling over the heap. Now that the line has another thing to say, the whole world is going to be pakir. What did he say? The American Chinese problem The American Chinese problem The United States is the world's most affected coronavirus. The US is also leading the death toll. The only reason China is not properly controlling the coronavirus is that the US and China are in frequent disputes. Trade war Trade war In the meantime, the Trade Deal for the ongoing trade war from 2018 is coming to a different panchayat. Just a few weeks ago, the US and China had to formally buy American goods as they were told in the trade deal. Refusing to buy American goods due to Corona, threatens to cancel the entire trade deal US officials US officials The Business Standard reports that two US officials have said that the US is considering a series of action against China. They have said that these suggestions are not yet up to US President Donald Trump. Trump's comment Trump's comment “The US and China have agreed a trade deal. Accordingly, China is also buying goods from the US. But it has become bipartisan now. "Corona is the first thing that matters," Trump told reporters. Extra tax Extra tax Will the US stop paying back its loans to China? When asked, 'I will do it the other way. US President Donald Trump has spoken out to upset the entire global economy by saying, "I will levy extra money." If the two major economic powers of the post-tax world play an extra tax, the world economy will beat itself up ..? Stock markets collapse Stock markets collapse Just delayed by the word that Trump will be taxing ... May 01, 2020 The US Nasdaq stock market fell 3.20% yesterday. London's FTSE stock market fell 2.34%. As the stock markets begin to fall, people start investing money in gold. That is what has happened recently. Gold prices internationally touched $ 1,686 on April 30, 2020 and touched $ 1,700 on Monday May 1, 2020. It is trading at $ 1,705 today. The reason for all this is Trump's additional tax threat. The price of gold, which has been going down since April 23, is beginning to rise again with Trump's words. 24 carat gold in Chennai is selling for indian Rs 46,400 today. 4,640 ₹ per gram of gold. What can we do ... 'Trump sir, think a little bit of anything. All is good. Gold is going to be a picture of everything going on ..... #SL_TAMIL_MUSLIM_TV_NETWORK

21 நாட்களுக்கு பின் மீண்டும் வந்த வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் இன்று அங்கு தொழிற்சாலை ஒன்றில் ஊழியர்கள் முன்னிலையில் பேசினார்.

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் 21 நாட்களுக்கு பின் இன்று மீண்டும் மக்கள் முன்னிலையில் தோன்றினார். அவரின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவிய நிலையில் இன்று அவர் மக்கள் முன்னிலையில் தோன்றினார். வடகொரியாவின் உழைப்பாளர் தினம் மற்றும் அங்கு இருக்கும் உர தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவிற்காக அவர் வெளியே வந்து இருக்கிறார்.
பியாங்யாங் நகரத்தில் இருக்கும் சன்சோன் போஸ்பாடிக் உர தொழிற்சாலையை திறப்பதற்காக அவர் வந்தார். அங்கிருக்கும் அதிகாரிகளுடன் சில நிமிடம் அவர் உரையாடினார். பின் ரிப்பனை கட் செய்து கட்டிடத்தை திறந்து வைத்தார்.
 புகைப்படம்
புகைப்படம் வெளியானது
இந்த நிலையில் கிம் உன் குறித்து காலையில் புகைப்படங்கள் மட்டும் வெளியாகி இருந்த நிலையில் தற்போது வீடியோவும் வெளியாகி உள்ளது. காலையில் புகைப்படங்கள் வெளியான போது, பலரும் அந்த புகைப்படங்கள் குறித்து சந்தேகம் எழுப்பினார்கள். அந்த புகைப்படங்களின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதை பழைய புகைப்படங்கள் என்று கூறினார்கள். அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
 வீடியோ
வீடியோ வெளியானது
இந்த வீடியோ கிம் மிகவும் ஆரோக்கியமாக காணப்படுகிறது. மிகவும் உறுதியாக திடமாக அதே சமயம் வேகமாக வீறுநடை போட்டு கிம் நடந்து வருகிறார். கிம்மை அங்கு மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்பதும். கிம் முகம் முழுக்க சிரிப்புடன் மக்களுடன் பேசுவதும் பெரிய வைரலாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கிம் என்ன பேசினார் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. அதில், இந்த உர தொழிற்சாலை வடகொரியாவின் வளர்ச்சியில் பெரிய பங்கு வகிக்கும்.

 பேசினார்
என்ன பேசினார்
வடகொரியா வரலாற்றில் இந்த தொழிற்சாலை முக்கிய மைல் கல்லாக இருக்கும். நாம் புதிய நாட்களை சந்திக்க இருக்கிறோம். நம்முடைய பொருளாதார பலத்தை பறைசாற்றும் புரட்சிகரமான இடமாக இது இருக்க போகிறோம். நம் நாட்டின் சாதனைகளில் ஒன்றாகவும், அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் இது இருக்கும். எனக்கு இங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பெரிய வரவேற்புக்கு நன்றி.

 இளைஞர்கள்
இளைஞர்கள் பலர்
இங்கே பணியாற்றிய எல்லோருக்கும் நன்றிகள். இந்த பணியாளர்கள் எல்லோருக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு இங்கு வந்த பின்தான் திருப்தியாக இருக்கிறது. இங்கே பல இளைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். நாம் இது போன்ற இளைஞர்களுக்கு வழி விட வேண்டும், என்று கிம் கூறியுள்ளார். ஆனால் தான் 21 நாட்களாக தலைமறைவானது குறித்தும், எங்கே சென்றார் என்பது குறித்தும் கிம் எதுவும் பேசவில்லை.





துரத்தி அடித்துவிட்டோம்.. அமெரிக்க போர் கப்பலை விரட்ட ஜெட்களை அனுப்பிய சீனா.. போருக்கு தயார் ஆகிறதா?

பெய்ஜிங்: தென் சீன கடல் எல்லையில் சுற்றிக்கொண்டு இருந்த அமெரிக்காவின் போர் கப்பல்களை விரட்டி அடித்துவிட்டதாக சீனா தெரிவித்து இருக்கிறது. வட கொரிய அரசியல் குழப்பங்களை பயன்படுத்த மாஸ்டர் பிளான்.. கொரோனா பரவல் ஒரு பக்கம் இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் போர் மூள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவ சீனாதான் காரணம் என்று அமெரிக்கா கடுமையாக குற்றஞ்சாட்டி வருகிறது. இன்னொரு பக்கம் தென் சீன கடல் எல்லையில் கடுமையான போர் ஆயத்தங்கள் நடந்து வருகிறது. தென் சீனாவின் அருகே இருக்கும் கடல் பகுதியை மலேசியா, வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடுகிறது. இங்கு அதிக அளவில் இருக்கும் எண்ணெய் வளம்தான் இதற்கு காரணம். காரணம் காரணம் எண்ணெய் ஏற்கனவே இங்கு மலேசியாவும் எண்ணெய் எடுக்கிறது. சீனாவும் எண்ணெய் எடுக்கிறது. இந்த கடல் பகுதியை மொத்தமாக கட்டுப்படுத்த சீனா முயன்று கொண்டு இருக்கிறது. ஆனால் அதற்கு தடையாக அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு உதவி செய்து, சீனாவிற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. முக்கியமாக அமெரிக்கா சீனாவிற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் மலேசியாவிற்கு ஆதரவு அளித்து வருகிறது. பதற்றம் அதிகரிக்கும் பதற்றம் கடந்த ஒரு வாரமாக இந்த பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் திடீரென்று தென் சீன கடல் பகுதியில் சீனா போர்கப்பல்களை குவித்ததுதான். மலேசியாவை அச்சுறுத்தும் வகையில் சீனா தனது போர் கப்பல்களை, மலேசியாவின் எண்ணெய் கிணறுகளுக்கு அருகே கொண்டு சென்றது. கொரோனாவால் நலிவடைந்து இருக்கும் அமெரிக்கா எதுவும் கேட்காது என்ற தைரியத்தில் சீனா இப்படி செய்தது. ரோந்து போர் கப்பல்கள் இந்த கடல் எல்லைக்குள் சீனாவின் Haiyang Dizhi போர் கப்பல்கள் கடந்த ஒரு வாரமாக சென்று ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் சீனாவை உடனே அடக்கும் வகையில் அமெரிக்கா தனது USS Bunker Hill மற்றும் USS Barry எனப்படும் போர் கப்பல்களை சீன எல்லைக்கு அனுப்பி வைத்தது. அதோடு அமெரிக்காவுடன் மலேசியாவின் போர் கப்பல்களும் கூட்டு சேர்ந்தது. பின் வியட்நாம் போர் கப்பலும் அமெரிக்காவுடன் சேர்ந்து தற்போது அங்கே ரோந்து பணிகளை கவனித்து வருகிறது. அமெரிக்க கப்பலுடன் ஆஸ்திரேலியாவின் போர் கப்பலும் இணைந்துள்ளது. போர் விமானம் ஜெட் விமானம் இந்த நான்கு நாட்டு போர் கப்பல்களும் சீனாவை நெருங்கி உள்ளது. இந்த நிலையில்தான் நேற்று அதிகாலை இந்த கடல் பகுதிக்கு சீனா தனது போர் விமானங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் போர் கப்பல்களை அடக்கும் விதமாக சீனா இந்த போர் விமானங்களை அனுப்பி உள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை தற்போது வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. விரட்டினோம் விரட்டி அடித்தோம் அதில், எங்கள் கடல் எல்லையில் சுற்றி வந்த அமெரிக்காவின் போர் கப்பல்களை விரட்டி முடித்துவிட்டோம். எங்கள் எல்லையில் நுழைந்து அவர்கள் பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு இருந்தது. ஹாங்காங்கில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் இப்படி செய்தனர். சர்வதேச விதிகளுக்கு எதிராக அமெரிக்கா இப்படி செயல்பட்டுள்ளது. எங்களுக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்து ஏற்படுத்தும் வகையில் இப்படி செய்கிறது. சீண்டுகிறது அமெரிக்கா சீண்டுகிறது எங்களை சீண்டும் வகையில் அமெரிக்கா செயல்படுகிறது. அமெரிக்கா தனது ராணுவத்தை எப்படி எல்லாம் முறையின்றி பயன்படுத்தும் என்பதற்கு இதுதான் உதாரணம். கொரோனா காரணமாக உலகமே முடங்கி உள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் அமெரிக்கா தங்கள் நாடு மீது கவனம் செலுத்த வேண்டும். அதை விடுத்து இப்படி போர் கப்பல்களை அனுப்ப கூடாது. நாங்கள் எப்போதும் கவனமாக இருப்போம். அதிக கவனம் சீன கடல் எல்லையில் யாரையும் நுழைய நாங்கள் விட மாட்டோம். நாங்கள் எப்போதும் மிக கவனமாக உறுதியாக இருப்போம். அமெரிக்காவை எங்கள் எல்லையில் அத்துமீற விட மாட்டோம். எங்கள் நாட்டின் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளக்க விட மாட்டோம். நாங்கள் மிக அதிகமாக கவனத்துடன் இருக்கிறோம் என்று சீனா கூறியுள்ளது. இதனால் அமெரிக்கா, சீனா இடையே போர் ஏற்படுவதற்கான அச்சம் ஏற்பட்டுள்ளது.https://youtu.be/knQwfIKq0FM

கோஷங்கள் முழங்க.. ஹீரோ போல கம் பேக் கொடுத்த கிம் ஜோங் உன்.. 21 நாட்கள் எங்கே போனார்.. என்ன செய்தார்?

பியாங்யாங்: 21 நாட்கள் காணாமல் போய் இருந்த வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் என்ன செய்தார்? எங்கே போயிருந்தார் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி... திரும்ப வருகிறார் கிம் | Kim Jong Un shows up பெரும் பரபரப்பிற்கும், வதந்திகளுக்கும் இடையே கிம் ஜோங் உன் குறித்த முக்கியமான அறிவிப்பு இன்று அதிகாலை வெளியானது. கடந்த மூன்று வாரமாக வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னின் உடல் நிலை குறித்து தொடர்ந்து சந்தேகங்கள் வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தது. அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக செய்திகள் பரவியது. வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மிக மோசமான உடல்நிலையுடன் இருப்பதாக அமெரிக்கா செய்தி ஊடகமான சிஎன்என் கடந்த வாரம் செய்தி வெளியிட்டு இருந்தது. இதுதான் அவரின் உடல்நிலை குறித்த சந்தேகங்களுக்கு காரணம் ஆகும். என்னாச்சு உடம்புக்கு கிம்.. வெயிட் போட்டாச்சு.. சிரிப்பையும் காணோம்.. பக்கத்துல நிக்குற பொண்ணு யாரு? மோசம் மோசமான உடல்நிலை கிம் ஜோங் உன்னின் உடல்நிலை மிக மோசமடைந்து இருக்கிறது, இதய அறுவை சிகிச்சை ஒன்றின் காரணமாக அவரின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது என்று செய்தி வெளியிட்டு இருந்தது. கிம் ஜோங் உன்னுக்கு கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு முதல் நாளான 11ம் தேதிதான் கிம் ஜோங் உன் மாயமானார். அதில் இருந்து தொடர்ந்து வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தது. நிறைய வதந்திகள் மோசமான வதந்திகள் அதன்படி கிம் ஜோங் உன் மூளை சாவு அடைந்துவிட்டார். மிக மோசமான உடல்நிலையுடன் இருக்கிறார். அவர் எப்போது வேண்டுமானாலும் பலியாகலாம் என்றெல்லாம் கூட செய்திகள் வெளியானது. அவர் இறந்துவிட்டார் என்றும் கூட செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்திகள் அனைத்திற்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மீண்டும் வந்து இருக்கிறார். வந்தார் மீண்டும் வந்தார் ஆம் இன்று அதிகாலை கிம் ஜோங் உன் மீண்டும் வந்தார். வடகொரியாவின் உழைப்பாளர் தினம் மற்றும் அங்கு இருக்கும் உர தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவிற்காக அவர் வெளியே வந்து இருக்கிறார். பியாங்யாங் நகரத்தில் இருக்கும் சன்சோன் போஸ்பாடிக் உர தொழிற்சாலையை திறப்பதற்காக அவர் வந்தார். அங்கிருக்கும் அதிகாரிகளுடன் சில நிமிடம் அவர் உரையாடினார். பின் ரிப்பனை கட் செய்து கட்டிடத்தை திறந்து வைத்தார். கோஷம் கோஷங்கள் எழும்பியது கிம் ஜோங் உன் இந்த நிகழ்ச்சிக்கு தன்னுடைய காரில்தான் வந்தார். ஆனால் எங்கிருந்து வந்தார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. அவர் உள்ளே வரும் போதே அங்கு பெரிய அளவில் கோஷங்கள் எழுந்தது. மக்கள் ஆரவாரமாக கோஷங்களை எழுப்பினார்கள். அவரை வரவேற்க பெரிய அளவில் பலூன்கள் பறக்க விடப்பட்டு இருந்தது. ஹீரோ போல கிம் ஜோங் உன் இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து இருந்தார். மக்களுக்கு தெரியும் மக்களுக்கு எல்லாம் தெரியும் கிம் ஜோங் உன் இப்படி மீண்டும் வருவார் என்று வடகொரியாவின் எல்லோருக்கும் தெரியும் என்கிறார்கள். அதனால் தென் கொரியா இதற்கு முன்பே அவர் நன்றாக இருக்கிறார் என்று அறிவித்து இருந்தது. அதேபோல் அந்நாட்டு மக்கள் இதனால் வெளிநாட்டு ஊடகங்கள் எதற்கும் பேட்டி கொடுக்கவில்லை. தென் கொரியாவில் இருக்கும் சொந்தங்களுக்கு கூட கிம் குறித்து, வடகொரியா மக்கள் எதுவும் சொல்லாமல் அமைதி காத்தது இதனால்தான் என்கிறார்கள். விமானத்தில் வரவில்லை விமானத்தில் எங்கும் செல்லவில்லை இதில் சில சுவாரசியமான விஷயங்கள் நடந்துள்ளது. கிம் ஜோங் உன் இத்தனை நாட்கள் வொன்சான் பகுதியில் சொகுசு பங்களாவில் வசித்து வந்துள்ளார். அவர் அங்கிருந்து ரயில் மூலமே பியாங்யாங் வந்துள்ளார். அவரின் விமானம் ஒரு மாதமாக பியாங் யாங் பகுதியில் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இத்தனை நாட்களாக வொன்சான் பகுதியில் இருந்த கிம்மின் ரயில் இப்போது அங்கு இல்லை என்ற தகவலும் இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது. மூன்று விஷயங்கள் மூன்று விஷயங்கள் பரவுகிறது கிம் ஜோங் உன் 21 நாட்கள் என்ன செய்தார் என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக நிறைய சந்தேகங்கள் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. #Kim_Jong_Un_shows_up

Friday 1 May 2020

#BREAKINGNEWS_SRILANKA

🚨#BREAKING_NEWS🚨 உள்ளூர் பால்மாவின் விலை அதிகரிப்பு. புதிய விலை பட்டியல்: 01kg -945/= 400g -380/= -நுகர்வோர் விவகார அதிகார சபை

Min:-ROUF_HAKEEM Reed & share share share

கொவிட் - 19 தொற்று நோய் நிலைமை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதோடு, இன ரீதியாக இலக்குவைத்து ஒரு சமூகத்தின் மீது பழி சுமத்தும் வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், நாட்டில் குறிப்பாக தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருபதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடும் விசனம் தெரிவித்துள்ளார். உலகெங்கும் அனுஷ்டிக்கப்படும் மே தினம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இஸ்லாம் தொழிலாளர்களின் உரிமைகளை சரிவர வழங்கியிருப்பதனால், முஸ்லிம் காங்கிரஸ் ஆண்டு தோறும் மே தினத்தைக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொள்ளவில்லை. ஏனென்றால், தொழிலாளர்களின் வியர்வை உலர்வதற்கு முன்னர் அவர்களது ஊதியத்தை வழங்கிவிடுமாறு இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறிய நபிமொழி சுனன் இப்னு மாஜா கிரந்தத்தில் (2443) பதிவாகியுள்ளது. கொவிட் -19 நோய்த் தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் தொழிலாளர்கள் தொழில் வாய்ப்பின்மை, பணிக் குறைப்பு, சம்பளம் வழங்கப்படாமை போன்ற பல்வேறு காரணிகளால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில்கூட அரசாங்கத்திடம் மானியம் கேட்டு குரல் எழுப்பும் நிலைமைக்கு தொழிலாளர்கள் ஆளாகியுள்ளனர். இலங்கையைப் பொறுத்தவரை கொவிட் -19 விவகாரம் கையாளப்படும் விதம் நிலைமையை மிகவும் சிக்கலாக்கியுள்ளது. அரசியல் உள்நோக்கங்களோடு, நோய் பரவல் பற்றிய அச்ச உணர்வு மேலோங்கியுள்ளதாகத் தோன்றுகிறது. மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டிருக்கின்றார்கள். பல மாவட்டங்களில் அவர்களது நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டபோதிலும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை உட்பட சில மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு ஏறத்தாழ ஒன்றரை மாதங்களாக நீடிக்கப்பட்டிருப்பதன் விளைவாக அன்றாடம் தொழிலுக்குச் செல்வோரும், நாளாந்தம் கூலித் தொழில் புரிவோரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக முஸ்லிம்கள் செறிவாக வசிக்கும் அக்குறணை, அட்டுலுகம போன்ற பிரதேசங்களில் ஓரிருவர் கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டதற்காக, அவ்வாறான பிரதேசங்களிலிருந்து ஏராளமானோர் தனிமைப்படுத்தல் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அக்குறணையில் 22 கிராம சேவகர் பிரிவுகளில் வசிப்போர் முடக்கப்பட்டுள்ளதனால் அங்குள்ளோரின் வாழ்வாதாரம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் தனவந்தர்கள் வழங்கிவரும் நிவாரண உதவிகளைத் தவிர அரசாங்கத்தினால் உரிய கவனஞ் செலுத்தப்படவில்லை. நாட்டில் பொதுவாக அரசாங்கத்தினால் வழங்கப்படுவதாகக் கூறப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவுக்காக அப்பாவி பொதுமக்கள் தங்களது தன்மானம், சமூக அந்தஸ்து என்பனவற்றை இழந்து நீண்ட வரிசைகளில் கால் கடுக்க தவம் கிடக்க வேண்டிய நிலைமை ஊடகங்களில்கூட சர்வசாதாரணமகக் காண்பிக்கப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் சர்ச்சைக்குள்ளாகி சட்டம் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடிக்குள் நாடு சிக்குண்டுள்ள நிலையில் கொவிட் - 19 நோய் நிலைமையை அரசியல் உள்நோக்கங்களுடனும், இனவாதச் சிந்தனையுடனும் தொடர்ந்து அணுகுவது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பையே சீர்குலைத்துவிடும் அபாயத்தை ஏற்படுத்தும். அத்துடன் தொழில் இழப்பு வேலையில்லாத் திண்டாட்டம் என்பவற்றின் விளைவாக பொதுமக்களின் வாழ்வாதாரம் முன்னெப்போதும் இல்லாதவாறு பாதிக்கப்படுவதற்கான அறிகுறிகள் இப்பொழுதே தென்படுகின்றன. ஊடகப் பிரிவு - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - #Rouf_hakeem

உலகளவில் கொரோனாவால் மொத்தம் 2,30,000 பேர் மரணம்.. அமெரிக்கா, இங்கிலாந்தில் நிலைமை படுமோசம்...

ஜெனிவா: கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 230000 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 33 லட்சத்தை கடந்ததுள்ளது. குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 10லட்சத்து 39 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கொரானா தடுப்பூசி போட்டு பார்க்கிறது அமெரிக்கா சீனாவில் தோன்றி கொரோனா வைரஸ் தொற்று உலகின் பல நாடுகளை கடுமையாக பாதித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ரஷ்யா, சீனா, துருக்கி, ஈரான், பிரேசில் என பல நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மீள வழி தெரியாமல் தவித்து வருகின்றன. உலகின் வல்லரசான அமெரிக்கா கொரோனா பாதிப்பால் உலகின் மற்ற எல்லா நாடுகளையும் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொத்துக்கொத்தாக அதிகரித்து வரும் மரணங்கள் மக்களை பீதிக்குள்ளாக்கி உள்ளது. பிணங்களை அடக்கம் செய்வதற்கு நேரம் இல்லாத அளவுக்கு உடல்கள் குவிந்து வருகிறது. இங்கிலாந்திலும் உயிரிழப்பு மிக மோசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் 3,3,04,140 பேர் கொரோனாவால் இன்று காலை நிலவரப்படி பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 2,33,829 ஆக அதிகரித்துள்ளது. குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை என்பது 1,0,39,055 ஆக உயர்ந்துள்ளது. உலகிலேயே மிக அதிகமாக அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் மட்டும் 2,201 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அங்கு கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 63,856 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் நேற்று ஒரு நாளில் 674 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26,771 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 11 குழந்தைகள்.. மொத்தமாக 142 குழந்தைகள்.. தமிழகத்தில் தீவிரம் அடையும் கொரோனா பாதிப்பு! இத்தாலியில் நேற்று 285 பேரும், ஸபெயினில் 268 பேரும், பிரான்சில் 289 பேரும் ஜெர்மனியில் 156 பேரும் ரஷ்யாவில் 101 பேரும்,, பிரேசிலில் 390 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ள #SL_TAMIL_MUSLIM_TV_NETWORK by-M.WASEEM.T.M

4 நான்கு மாவட்டங்களின் அனைத்து நடவடிக்கையும் ஆரம்பிக்க கோட்டாபய

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும், மக்களின் வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை ஆரம்பிக்கமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 11ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி செயலகம் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளை நடத்தி செல்லுதல் மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களை திங்கட்கிழமை முதல் நடத்தி செல்ல வேண்டும். சேவையின் அத்தியாவசியத்தை கருத்திற்கு கொண்டு அதற்கு அவசியமான திட்டங்களை தற்போதிருந்தே தயாரிக்குமாறு நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களை திறந்து நடத்தி செல்லும் போது கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவை பணிப்பாளர் தலைமையிலான சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ள அவுறுத்தல்களை முழுமையாக கடைபிடிப்பதனை அவதானிக்க வேண்டியது நிறுவன பிரதானிகளின் பொறுப்பாகும். திணைக்களம், கூட்டுத்தாபனம் உட்பட அரச நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்பட வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் ஊழியர்கள் அழைக்கப்படுவது எந்த பணிக்கு என்பதனை நிறுவனங்களின் பிரதானிகளின் வழிக்காட்டல்களுக்கமைய தீர்மானிக்கப்படும். தனியார் நிறுவனங்கள் திறக்கப்படும் நேரம் காலை 10 மணியாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைக்காக மக்கள் அவசியமற்ற முறையில் வீதிக்கு வருதல் மற்றும் வேறு இடங்களில் ஒன்று கூடுவதனை நிறுத்த வேண்டும். போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் ரயில் பெட்டிகளில் பணிகளுக்கான பயணிகள் போக்குவரத்து மேற்கொள்ள மாத்திரம் மட்டுப்படுத்த வேண்டும். அத்தியாவசிய சேவைக்கு செல்லும் நபர்களை தவிர்த்து ஏனைய மக்கள் நோய் தடுப்பு பணிகளுக்காக வீடுகளில் இருந்து உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. யாரேனும் வீட்டை விட்டு செல்ல வேண்டும் என்றால் உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள மாத்திரமே செல்ல முடியும். கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவடங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளுக்கு மே மாதம் 6ஆம் திகதி வரை முன்னர் காணப்பட்ட, அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டு 8 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் முன்னெடுக்கப்படும் #SL_TAMIL_MUSLIM_TV_NETWORK Ft.by-M.WASEEM.T.M

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்! எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றாளர்கள்!எண்ணிக்கை 674ஆக அதிகரிப்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 8 பேர் இன்று பிற்பகல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 671ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 157 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 510 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் #SL_TAMIL_MUSLIM_TV_NETWORK Ft.by-M.WASEEM.T.M

மிகப்பெரிய 'இறுதி' ஊர்வலத்திற்கு 'தயாராகும்' வடகொரியா?... வைரலாகும் 'செயற்கைக்கோள்' படங்கள்!

வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக வெளியான செயற்கைக்கோள் படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவை விட வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்த தகவல்கள் தான் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. முதலில் அவருக்கு கொரோனா இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் இதய அறுவைசிச்சை செய்து கொண்டதாகவும், அதில் அவர் நினைவை இழந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அண்டை நாடான தென் கொரியா இந்த தகவல்களை தொடர்ந்து மறுத்து வருகிறது. கிம் நலமுடன் இருப்பதாக தொடர்ந்து தென் கொரியா தெரிவித்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கிம்மின் உடல்நிலை குறித்த தகவல்களை அறிய ஆர்வம் காட்டி களத்தில் குதித்துள்ளன. குறிப்பாக சீனா, அமெரிக்கா இரண்டு நாடுகளும் இந்த போட்டியில் நேரடியாக இறங்கி இருக்கின்றன. கடந்த 11-ம் தேதியில் இருந்து கிம் பொதுவெளியில் தோன்றாததால் அவர் சிகிச்சையில் தான் இருக்கிறாரா? என்ற சந்தேகம் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன் கிம்மின் ட்ரெயின் வடகொரியாவின் வொன்சான் கடற்கரை ரிசார்ட்டுக்கு அருகிலுள்ள அவரது அரண்மனைக்கு பக்கத்தில் நிற்பது கண்டறியப்பட்டது. #SL_TAMIL_MUSLIM_TV_NETWORK Ft.by. M.WASEEM.T.M North Korea is ready for the biggest 'funeral procession' ... Viral 'satellite' pictures! Satellite images released as North Korea prepares for the largest funeral have shocked. North Korean President Kim Jong Un's health is more hot topic than Corona. At first he was said to have a corona. It was later revealed that she had had heart surgery and lost consciousness. But neighboring South Korea has consistently denied this information. South Korea continues to report that Kim is well. Meanwhile, countries including the United States, China, and Japan have jumped into the spotlight on Kim's health. China and the United States, in particular, are directly involved in this contest. Has Kim been in therapy since last 11, when she hasn't appeared in public? There is suspicion among the countries of the world. A few days ago, Kim's train was found standing next to her palace near North Korea's Wonsan Beach Resort. #Kim_Jong_Un #North_Korea_president #SL_TAMIL_MUSLIM_TV_NETWORK Ft.by.M.WASEEM.T.M

மே 10க்கு முன் கொரோன கட்டுப்படுத்தப் படாவிட்டால் தேர்தலை நடத்த முடியாது - மஹிந்த தேசப்பிரிய... If the coronation is not controlled before May 10, elections will not be held - Mahinda Deshapriya ...

மே 10க்கு முன் கொரோன கட்டுப்படுத்தப் படாவிட்டால் தேர்தலை நடத்த முடியாது - மஹிந்த தேசப்பிரிய...

மே மாதம் 10ம் திகதிக்கு முன்னர் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தி விட்டதாக சுகாதார துறை அறிவித்தால் மாத்திரமே ஜுன் 20ம் திகதி தேர்தலை நடத்துவது சாத்தியமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான ஆரம்ப கட்ட வேலைகளை முன்னெடுத்து வரும் தேர்தல்கள் தினைக்களம் முக்கியமான வேலைகளை இறுதி நேரத்தில் தான் மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

#SL_TAMIL_MUSLIM_TV_NETWORK

Ft.M.WASEEM.T.M Elections commission president Mahinda Deshapriya said the elections would be held on June 20 only if the health department announced that it had completely controlled Corona before May 10. He added that the elections, which are in the early stages of the election, will carry out important work at the end of the day. #SL_TAMIL_MUSLIM_TV_NETWORK Ft.M.WASEEM.T.M

கொரோனாவை வெற்றிகொள்வேன்-ஜனாதிபதி கோட்டாபய சூளுரை! President will win Corona #gotabaya #covid19

       

நாட்டில் பரவிவரும் கொரோனா அச்சுறுத்தலை நிச்சயம் வெற்றிகொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது மே தின வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த சவாலை விடுத்திருக்கிறார்.

கடந்த வருடம் மிலேச்சத்தனமாக தீவிரவாத தாக்குதலினால் பல்வேறு சங்கடங்கள் ஏற்பட்டதாக கூறிய அவர், தற்போது முழு உலகத்திற்கும் எதிர்பாரா தொற்று பரவி நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றதாகவும் குறிப்பிட்டார்.

இத்தருணத்தில் இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை நிச்சயம் நாம் வெற்றிகொள்வோம் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சூளுரைத்துள்ளார்

Ft.M.WASEEM.T.M

President Gotabhaya Rajapakse says he will definitely overcome the corona threat spreading across the country.

In his May Day greeting, he addresses the challenge.

He said that last year's barbaric terrorist attack had caused many embarrassments, and that the current epidemic had spread to the entire world.

President Gotabhaya Rajapaksa has asserted that the coronavirus threat will surely be overcome at this moment.

Ft.M.WASEEM.T.M

LIKE|SHARE |FALLOW
#SL_TAMIL_MUSLIM_TV_NETWORK