Wednesday 6 May 2020

இலங்கையில் மிக வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... தொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகாரிப்பு! எவ்வளவு தெரியுமா?


கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக நேற்று இரவு 9.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 24 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 795 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி அடையாளம் காணப்பட்ட 795 தொற்றாளர்களில் 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் 28 ஆம் திகதி கொரோனாவால் இலங்கையில் முதலாவது மரணம் பதிவானது. அது முதல் இரு பெண்கள் உட்பட 9 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் 28 ஆம் திகதி மாரவில பகுதி நபர் ஒருவரும், 30 ஆம் திகதி நீர்கொழும்பு போரத்தொட்டை பகுதி நபர் ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்திருந்தனர். ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மருதானை பகுதியில் ஒருவரும், 2 ஆம் திகதி இரத்மலானையைச் சேர்ந்த ஒருவரும், 4 ஆம் திகதி ஹோமாகமவை சேர்ந்த ஒருவரும் 7 ஆம் திகதி தெஹிவளையைச் சேர்ந்த ஒருவரும், 8 ஆம் திகதி கல்கிசையைச் சேர்ந்த ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்திருந்தனர். அதன் பின்னர் உயிரிழப்புக்கள் பதிவாகாத நிலையில், இம்மாதம் 4,5 ஆம் திகதிகளில் இரு பெண்கள் கொரோனாவால் உயிரிழந்தனர். குருணாகல் - பொல்பித்திகமவைச் சேர்ந்த ஒருவரும் கொழும்பு 15 - முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்தனர். அதன்படி இதுவரை உயிரிழந்துள்ள 9 தொற்றாளர்களில் 6 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தோர் ஆவர். ஏனைய மூவரில் ஒருவர் கம்பஹா மாவட்டத்தையும் மற்றையவர் குருணாகல் மாவட்டத்தையும் சேர்ந்தவர்களாவர். இதுவரை நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் 345 பேர் கடற்படை வீரர்களாவர். அவர்களில் 8 பேர் இதுவரை பூரண சுகம் பெற்றுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவித்தன. இன்று மட்டும் 2 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். இந் நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றின் பின்னர் குணமடைந்தோர் எண்னிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் மேலும் 571 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை மற்றும் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன் மேலும் 153 பேர் கொரோனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் 3 வெளிநாட்டவர்கள் உள்ளடங்குகின்றனர். அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வந்து நேரடியாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 41 பேரும், உள் நாட்டிலிருந்து தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில் கண்டறியப்பட்ட 64 பேரும் இதுவரை கண்டறியப்பட்ட தொற்றாளர்கள் பட்டியலில் உள்ளடங்குகின்றனர். இதனைவிட முப்படைகளைச் சேர்ந்த 356 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 345 பேர் வெலிசறை மற்றும் ரங்கல கடற்படை முகாம்களைச் சேர்ந்தவர்களாவர்.

Tuesday 5 May 2020

*கொலன்னாவை, இராஜகிரிய, கண்டி – கொலபிஸ்ஸ பிரதேசங்களைச் சேர்ந்த 138 பேர் தனிமைப்படுத்தல்!*


கொலன்னாவை, இராஜகிரிய மற்றும் கண்டி – கொலபிஸ்ஸ ஆகிய பிரதேசங்களைச் பிரதேசங்களை சேர்ந்த 138 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி இராஜகிரிய பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் 29 பேரும் கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 27 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இன்று (05) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் கண்டி – கொலபிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். குறித்த மூன்று பிரதேசங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையிலேயே இந்த தனிமைப்படுதத்ல் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Monday 4 May 2020

சவூதியினால் 150 மெற்றிக்தொன் பேரீச்சம் பழங்கள் இலங்கைக்கு அன்பளிப்பு.... !!!!!!


முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக சவூதி அரேபியாவினால் 150 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது. நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் இந்த பேரீச்சம் பழங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என இலங்கைக்கான சவூதி அரேபிய தூ துவர் அப்துல் நாசர் எச். அல்-ஹாரீதி வேண்டிக்கொண்டதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பீ.எம்.அஷ்ரப் தெரிவித்தார். இதற்கமைய இந்த பேரீச்சம் பழங்கள் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ரீதியாக வாழும் முஸ்லிம்களின் சனத்தொகை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு உலகமும் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் சவூதி அரேபியாவினால் இலங்கை முஸ்லிம்களுக்கு பேரீச்சம் பழங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாசர் எச். அல்-ஹாரீதி மற்றும் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் ஆகியன முன்னெடுத்திருந்தன. මෙතිකිටන් මුතු පලතුරු 150 ක් ශ්‍රී ලංකාවට පරිත්‍යාග කරන ලදි .... මුස්ලිම් ආගමික හා සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුවට අනුව පලතුරු මෙට්‍රික් ටොන් 150 ක් සෞදි අරාබිය විසින් මුස්ලිම්වරුන්ට බෙදා හැරීම සඳහා පරිත්‍යාග කර ඇත. මෙම යාච් prayer ාවේ fruits ල රටේ වෙසෙන සියලුම මුස්ලිම්වරුන්ට බෙදා දිය යුතු බව සෞදි අරාබියේ දොර අබ්දුල් නසාර් එච්. හසන් මහතා පැවසීය. මුස්ලිම් ආගමික හා සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂ ඒබීඑම් අෂ්රෆ් පැවසුවේ අල් හරිඩි යාච් ying ා කරමින් සිටින බවයි. පලතුරු දිස්ත්‍රික්කයේ වෙසෙන මුස්ලිම් ජනගහනයේ සහ ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලවල පදනම මත මෙම ප්‍රශ්නය බෙදා හැර ඇති බව ඔහු පැවසීය. කිරීටක වෛරසය පැතිරීමත් සමඟ මුළු ලෝකයම අවුල් ජාලයක පවතී. මේ සඳහා ශ්‍රී ලංකාවේ සෞදි අරාබි තානාපති අබ්දුල් නසාර් එච්.ඒ. අල්-හරිඩි සහ කොළඹ සෞදි අරාබි තානාපති කාර්යාලය පෙරමුණ ගෙන තිබේ. 150 methikithon pear fruits donated to Sri Lanka .... According to the Department of Muslim Religious and Cultural Affairs, 150 metric tons of fruits have been donated by Saudi Arabia for distribution to Muslims. Saudi Arabian Door Abdul Nasser Hassan, Sri Lanka, said the ban should be distributed to all Muslims living in the country. Director of Muslim Religious and Cultural Affairs Department ABM Ashraf said al-Haridi was praying. According to him, the issue has been distributed on the basis of the population of Muslims living in the fruit district and divisional secretariats. With the spread of the coronavirus, the whole world is in shambles. The Saudi Arabian Ambassador to Sri Lanka, Abdul Nasser HA, has taken all measures to do this. Al-Haridi and the Saudi Arabian Embassy in Colombo have taken the lead. By. M.waseem.t.m

தற்கொலை குண்டுதாரி சஹ்ரானை அழைத்து போதனை நடத்திய பொறுப்பாளர் கைது! வெளியான பல தகவல்கள்...... #Easter_bomb_blast


உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் புத்தளம் பிரதேசத்தின் அமைப்பொன்றும் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் சி.ஐ.டி. தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்த நிலையில் அதன் பொறுப்பாளராக செயற்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய தினம் புத்தளம் - கற்பிட்டி, 4 ஆம் குறுக்குத் தெரு பகுதிக்கு சென்ற சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு குறித்த நபரை அவரது வதிவிடத்தில் வைத்து பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்ததாகவும், கைது செய்யப்பட்ட நபர் சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடிக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார். குறித்த நபர் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினை நடாத்தி வந்துள்ள நிலையில், அதன் நிதி ஊடாக அடிப்படைவாதத்தை போதனை செய்ய பயிற்சி நெறிகளை முன்னெடுத்துள்ளதாகவும், அதற்காக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை நடாத்திய குண்டுதாரிகள் வந்து சென்றுள்ளமையும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார். அவ்வாறு நடாத்தப்பட்ட பயிற்சி நெறிகளின் போது பயிற்சி நெறிகளுக்கு பொறுப்பாளராகவும் குறித்த நபரே செயற்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி. தெரிவித்தது. புத்தளம் , மதுரங்குளி, அசார் நகரை மையப்படுத்தி இயங்கியதாக கூறப்படும் மேற்படி அரச சார்பற்ற நிறுவனம் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இந்த அரச சார்பற்ற நிறுவனத்தின் பொறுப்பாளரால் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள அடிப்படைவாத போதனை முகாம்களில், பயங்கரவாதி சஹ்ரான், சங்ரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரி மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட் மற்றும் சினமன் கிரான்ட் ஹோட்டல் தற்கொலைதாரி மொஹம்மட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டுள்ளதக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகள் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவின் கீழ் இடம்பெற்று வருகின்றது #easter_bomb_blast_srilanka #zaharan

மே 11 இல் ஊரடங்கு தளர்வு - ஜூன் 1 இல் பாடசாலைகள் மீண்டும் திறப்பு.........


எதிர்வரும் ஜூன் மாதம் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 11ம் திகதி அரச நிறுவனங்களின் பணிகள் ஆரம்பிப்பதுடன் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க வேண்டுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் ஆலோசனை வழிகாட்டல்கள் அடிப்படையில் முழுமையான சமூக இடைவெளி பேணப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. முகக் கவசங்கள் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், கைகளை கழுவுவதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் அனைத்து பாடசாலைகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றால் இதுவரை நாட்களும் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டிருந்தாலும் எதிர்வரும் திங்கட்கிழமை அதாவது மே 11இல் ஊரடங்கை தளர்த்தல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் ஜூன் 1ம் திகதி பாடசாலை திறக்கப்படவுள்ளது.......

இலங்கையில் கொரோனாவால் இறந்தவரின் ஊரில் தங்க நிறத்தில் விசித்திர வெளவால் ....


பொல்பித்திகம பிரதேசத்தில் தங்க நிறத்திலான விசித்திர வெளவால் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. வண்ணாத்துப்பூச்சியைப் போன்று அளவில் சிறிய விசேட வகை வெளவால் ஒன்றே இவ்வாறு அவதானிக்கப்பட்டுள்ளது. பொல்பித்திகம பிரதேசத்தில் வீடு ஒன்றில் இந்த வெளவால் அவதானிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் வீட்டில் உள்ள சிலந்தி வலை ஒன்றில் இந்த வெளவால் சிக்கியிருந்ததாகவும் அதனை பாதுகாப்பாக மீட்டு, பறக்க விட்டதாகவும் வீட்டிலிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் இன்று கொரோனாவால் உயிரிழந்த பெண்ணும் இதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது . அத்தோடு கொரோனா வைரஸ் வெளவால் மூலம் தான் பரவியது என்பதும் இன்றுவரை உறுதிசெய்யப்படாத தகவலாகவும் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது

சின்னத்திரை நடிகை திடீரென விவாகரத்து.. காதல் கணவரை பிரிந்தார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!


பிரபல டிவி நடிகை திடீரென விவாகரத்து செய்துகொண்டது சின்னத்திரை ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை மேக்னா வின்சென்ட். இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வம் தந்த வீடு' தொடரில் சீதா ராம்குமார் சக்கரவர்த்தி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். சினி தரவரிசை சிறந்த நண்பர்களாக தமிழ் திரைப்படங்களில் புகழ் பெற்ற கதாபாத்திரங்கள் தல அஜித்குமார் படங்களின் சிறந்த பின்னணி இசை பட்டியல் தமிழ் படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகைகள் தமிழில் த்ரிஷாவை ஒரு முன்னணி நடிகையாக ஜொலிக்க வைத்த சூப்பர் ஹிட் படங்கள் மாபெரும் தோல்வியை சந்தித்த தல அஜித் குமாரின் திரைப்படங்கள் நடிகர் விஜய் குரலில் ரசிகர்களின் மனம் கவர்ந்த 15 பாடல்கள் மக்களிடம் "தொற்றுநோய் பரவல்" திரைக்கதையில் பிரபலமான தென்னிந்திய படங்கள் தல அஜித் குமாரின் சிறந்த திரைப்படங்கள் தல அஜித் நிராகரித்த பிளாக் பஸ்டர் தமிழ் திரைப்படங்கள் இதில் இவர் நடிப்பு பேசப்பட்டது. இது இந்தியில் வெளியான, சாத் நிபானா சாதியா என்ற தொடரின் ரீமேக். அவளும் நானும் இதையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பொன்மகள் வந்தாள்' என்ற தொடரில் ரோகிணி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த தொடரும் நன்றாகப் பேசப்பட்டது. இதையடுத்து அவளும் நானும் என்ற தொடரிலும் நடித்தார். இதிலும் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டது. மலையாள நடிகையான மேக்னா வின்சென்ட், அங்கும் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். கயல் படத்தில் சில மலையாள படங்களிலும் நடித்துள்ள அவர், தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் ஆனந்தி, சந்திரன் நடித்த கயல் படத்திலும் நடித்திருந்தார். இவர் டான் டோமி என்பவரை காதலித்து வந்தார். காதலுக்கு குடும்பத்தினர் பச்சை கொடி காட்டியதை அடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். டான் டோமியின் சகோதரி டிம்பிள் ரோஸூம் சின்னத்திரை நடிகை. திருமணம் மேக்னா - டான் டோமி, டிம்பிள் - ஆன்சன் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் ஒரே நாளில் திருச்சூரியில் நடந்தது. டிம்பிள் திருமணம் 2016 ஆம் ஆண்டு நடந்தது. மேக்னா-டான் டோமி திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு எர்ணாகுளத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதில் ஏராளமான திரைத்துறையினரும் சின்னத்திரையை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். விவாகரத்து இந்நிலையில் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர். சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். டான் டோமி, இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது. பிரபல டிவி நடிகை ஒருவர் விவாகரத்து செய்துள்ள செய்தி, ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Sunday 3 May 2020

20 ஆண்டுகளுக்குப் பின் கலிபோர்னியாவை பயங்கர நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Earthquake shocks California 20 years later Subsequent earthquakes have caused great damage.


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 150 மைல் தொலைவில் உள்ள ரிட்ஜெர்செட் என்ற இடத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் கலிபோர்னியாவை தாக்கிய மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது. Greatest Earthquake in 20 Years Hit Southern California நிலநடுக்கத்துக்குப் பின்னர் 1,700 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. இது ரிக்டரில் 5.4 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்துக்கு பிந்தைய அதிர்வானது சியர்லெஸ் பள்ளத்தாக்கு பகுதி அருகே மையமாக கொண்டு ஏற்பட்டது. திரைப்படங்களில் பார்ப்பதைப் போல ஒரு பயங்கரமான நிலநடுக்கமாக உணர்ந்தோம் என்கின்றனர் ரிட்ஜெர்செட்வாசிகள். ஒவ்வொரு முறை நில அதிர்வு ஏற்படும் போதும் ஒட்டுமொத்தமாக கட்டிடங்கள் குலுங்கிக் கொண்டே இருந்தன என்றும் பீதியுடன் தெரிவித்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பல இடங்களில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் தீ பிடித்துள்ளன. பல இடங்களில் சாலைகள் பிளவுபட்டுள்ளன. லாஸ் வேகாஸ் முதல் ஆரஞ்ச் கவுண்ட்டி வரையும் கலிபோர்னிய நகரம் முழுவதுமே பெரும் சேதத்தை எதிர்கொண்டிருக்கிறது. Earthquake shocks California 20 years later Subsequent earthquakes have caused great damage. The quake was centered on Ridgesett, 150 miles north of Los Angeles, USA. It is the most powerful earthquake that has hit California in the last 20 years. Greatest Earthquake in 20 Years Hit Southern California After the earthquake, there were 1,700 earthquakes. It was 5.4 on the Richter. The aftermath of this earthquake was centered near the Searles Valley area. Ridgesettes say we felt a terrible earthquake as we see in the movies. He said the buildings were shaking every time the earthquake struck. Several areas of the earthquake have experienced gas leaks. In some places fires have been reported. Roads are divided in many places. The entire city of California, from Las Vegas to Orange County, has suffered major damage. #earthquake #eartquake_today_Near_me_now #earthquake_Puerto_rico #eartgquake_in_California_now #los_angle_earthquake

ரமழான் பகல் நேரங்களில் ஏற்படும் நெஞ்செரிவை எவ்வாறு தவிர்ப்பது? – Dr.Muhammad Abdullah Jazeem M.B.B.S, M.R.C.G.P – நோன்பு நோற்றாலானது உடல் உள ஆரோக்கியமிகு செயலாகும்' Like|fallow|share|


தற்சமயம் பல கோடி கணக்கான முஸ்லிம்கள் அதிகாலை தொடக்கம் மாலை வரை ரமழான் நோன்பை நோற்றவாறு உள்ளனர். இவ்வகையான நோன்பானது பல வழிகளில் எமக்கு நன்மை பயக்க வல்லது. அவையாவன, உடல் தொழிற்பாடு சம்மந்தப்பட்ட நன்மைகள் உள தொழிற்பாடு சம்மந்தப்பட்ட நன்மைகள் ஆண்மீகம் சம்மந்தப்பட்ட நன்மைகள் எமது உடற் கலங்களானது புரதம், மாப்பொருள் (starches), கொழுப்பு (Lipids ) மற்றும் நீர் கொண்டு உருவாக்கப்பட்டது. எமது உடலிற்கு தேவையான முதற்தர சக்தி குளுக்கோஸ் (கார்போஹைட்ரெட்ஸ்) மூலமாக சாதாரன நிலைமயில் உடலிற்குக் கிடைக்கப்பெறுகிறது. எனினும் நோன்பின் பிற்பகுதியில் கொழுப்பின் மூலம் உருவாகும் கீடோன் அலகுகளால் (ketone bodies) மூளைக்கு தேவையான சக்தி மாற்றீடாக உருவாக்கப்பட்டு ஈடுசெய்யப்படுகிறது. இவ்வாறு உடலில் குளுகோஸ் அளவு குறையும் போது கீடோன் அலகுகளால் வழங்கும் சக்தியானது உடலுக்கு அனுசேப தாக்க அழுத்தங்களை ஈடு செய்யும் திறனை கற்றுக்கொடுக்கிறது. இதனால், மூளையின் செயற்திறன் பன்மடங்கு அதிகரிக்கின்றது. (build up another metabolic pathway) ஒரு ஆராய்ச்சியில் கிடைக்கும் சான்றின் மூலம் எமக்கு அறியக்கிடைப்பது நோன்பானது பக்கவாதம், மேலும் வயோதிப காலங்களில் ஏற்படும் மறதி (Parkinson's infection, Alzheimer's illness), மூளை, முண்ணானில் ஏற்றபடும் அழுத்தங்களையும் ( stress related injury) குறைப்பதாகக் கூறுகிறது. நோன்பும் – ஞாபகசக்தியும் மற்றும் விவேகமும் நோன்பு நோற்றப்பதனால் ஏற்றப்படும் உடல் அனுசேப சக்தி சுழற்சி (discontinuous metabolic exchanging system) முறைமையானது ஞாபகசக்தியையும் சிந்தனாசத்தியையும் வெகுவாக அதிகரிப்பதாக ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் காணக்கிடைக்கிறது. *எனவே உங்கள் குழந்தைகளுக்கு நோன்பு நோற்கக் கற்றுக்கொடுங்கள்.* - Nature Neuroscience- இன்னொரு ஆராய்ச்சியின் படி நோன்பின் மூலம் ஏற்படும் உடல் நிறை குறைவானது நீரிழிவு தொடக்க நிலையில் ஏற்படும் இன்சுலின் குறைவை நிவர்த்தி செய்யும் ஒரு அரு மருந்தாகப் பார்க்கப்படுகிறது. பிறிதொரு ஆய்வின் படி உடலுக்கு தேவையான கலோரி அளவை 825 கலோரியாக நாளொன்றுக்கு மட்டுப்படுத்தப்படும் போது ஏற்படும் கணிசமான உடல் நிறைக் குறைவு மூலம் தொடக்க நிலை நீரிழிவு நோய், குருதி அழுத்தம் என்பனவற்றை மருந்துகள் மூலம் குணப்படுத்துவதை விடவும் மிக ஆரோக்யமாக குணப்படுத்தலாம் என அறியக்கிடைக்கின்றது. 'Essential Care-drove weight the executives' உடல் நிறைக் குறைப்பு மற்றும் ஒழுங்கான உடற் பயிற்சி என்பன ஆரோக்கியமான வாழ்விற்கு இன்றியமையாதவையாகும்.இவற்றின் மூலம் இன்சுலின் சுரப்பு உடற் கலங்களுக்குள் செல்ல ஏற்படும் தடை கணிசமான அளவு குறைக்கப்படுகிறது. உடல் நிறையும், இடுப்பு சுற்று பருமனும் அதிகரிப்பதானது இதயம் சம்மந்தப்பட்ட நோய்களுக்கான ஆரம்பப் படித்தரமாகும். இவ்வாறு உடற் பருமன் கூடும் போது குருதி அழுத்தம்,கொலெஸ்டெரோல் (triglycerides) படிவு அதிகமாவதுடன் நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டமும் எட்டப்படுகின்றது. இடுப்பு சுற்றானது ஆண்களுக்கு 40 inches விட அதிகமாகவும் பெண்களுக்கு 35 inches ஐ விடவும் அதிகரிக்கும்போது உடற் கட்டமைப்பில் மாற்றம் உள்ளும் புறமுமாக ஏற்படுகிறது. இதனை பின் வரும் படம் விளக்குகிறது.இவ்வுடல் செயற்பாடை metabolic disorder என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ( representation is in the connection) நோன்பானது அதனை உரிய முறையில் நோற்றக்கப்படும் போது உடல் நிறை குறைக்க உதவுகின்றது. மற்றும் முறையான இதயத்துடிப்பு வேகத்தையும் , சுவாசத்தையும் உரிய அளவிற்கு மட்டுப்படுத்துகிறது. மேலும் குருதி அழுத்தத்தை சீராக்குகிறது. இறுதியாக சமிபாட்டு தொகுதியின் வினைத் திறனை அதிகரிக்கிறது. 'நோன்பு நோற்றப்பதனால் பொதுவாக இதயம் ஆரோக்கியம் பெறுகிறது' சமிபாட்டுத் தொகுதியில் ஏற்படும் வினைத்திறன்கள் எமது சமிபாட்டுத் தொகுதி கணிசமான நன்மை பயக்கும் நுண்ணுயிர்களைக் கொண்டுள்ளது. இவை பொதுவாக பாக்டீரியாக்களின் தொகுதியாகும். இவை உணவு ஜீரணித்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நோன்பின் போது சமிபாட்டுத் தொகுதியானது ஓய்வில் இருப்பதனால் இந்நுண்ணுயிர்களின் பெருக்கம் வினைத்திறன் என்பன அதிகரிப்பதால் சமிபாட்டுத் தொகுதி திறன்பட செயற்படுகிறது. மன அழுத்தம் குறைவதால் சந்தோசம் அதிகரிக்கின்றது இன்னொரு அறிக்கையின்படி உடற்ப்பயிற்சி , நோன்பு நோற்றல் என்பன மன அழுத்தத்தைக் குறைத்து சந்தோசத்தை அதிகரிப்பதாகக் அமைகின்றன...

கொரோனாவுக்கு நடுவே .. வங்கதேசத்தில் பசி பட்டினியுடன் தஞ்சமடைந்த 40 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் By m.waseem.t.m


டாக்கா: உலகமே கொரோனா அச்சத்தால் முடங்கிக் கிடக்கும் நிலையிலும் 40 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் வங்கதேசத்தில் பசி பட்டினியுடன் தஞ்சமடைந்துள்ளனர். மியான்மரில் இருந்து ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சி வங்கதேசத்துக்கு அகதிகளாக ரோஹிங்கியா முஸ்லிமள் நீண்ட ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தெற்கு வங்கதேச கடற்பரப்பில் 40 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் கரை இறங்கினர். 40 Rohingya refugees land in Bangladesh மியான்மரில் இருந்து படகுகள் மூலம் வந்து பின்னர் இவர்கள் கரை ஒதுங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. ஏற்கனவே பல நாடுகள் கொரோனா அச்சத்தால் அகதிகளை நாடுகளுக்குள் அனுமதிப்பது இல்லை. இதனால் அவர்கள் பட்டினியால் நடுக்கடலிலேயே தாங்கள் வந்த படகுகளிலேயே உயிருக்குப் போராடி வருகின்றனர். இந்த துயரையும் சுமந்தபடி 40 ரோஹிங்கியாக்கள் வங்கதேச கரையில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 பேர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். ஏற்கனவே வங்கதேசமும் ரோஹிங்கியா அகதிகளை ஏற்கப் போவதில்லை என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. Fallow our facebook page.. #
SL_TAMIL_MUSLIM_TV_NETWORK

பயோ வார் பழியை சுமந்த நாடு.. கொரோனாவால் ரஷ்யாவில் ஒரே நாளில் திருப்பம்.. உளவு தேசத்தின் பரிதாப நிலை! By m.waseem.t.m


கொரோனா வைரஸ் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா இணைந்து இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமலே இருந்த ரஷ்யா தற்போது வேக வேகமாக கேஸ்களை சந்திக்க தொடங்கி உள்ளது. கொரோனாவால் ரஷ்யாவில் ஒரே நாளில் திருப்பம் கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி வந்த சமயம் அது. அமெரிக்காவில் அப்போது ஆயிரம் என்ற எண்ணிக்கையை கொரோனா வைரஸ் கடந்து இருந்தது. ஆனால் அப்போது ரஷ்யாவில் மட்டும் கொரோனா வைரஸ் பரவாமல் இருந்தது. ரஷ்யாவில் வெறும் 120 பேர் மட்டுமே பிப்ரவரி இறுதியில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தனர். ரஷ்யா கொரோனாவிற்கு எதிராக தனது எல்லைகளை மூடி, மிக கடுமையாக கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. இதனால் ரஷ்யாவில் கொரோனா கேஸ்கள் பெரிய அளவில் ஏற்படாது என்றுதான் கணிக்கப்பட்டது. சிங்கப்பூரில் இன்று 657 பேருக்கு கொரோனா பாதிப்பு- கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்வு ஆனால் நிலைமை ரஷ்யாவும் கொரோனா வைரஸை தடுக்கும் பொருட்டு தீவிரமாக கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியது. இந்தியாவை போலவே ரஷ்யாவிலும் கொரோனா தீவிரம் அடையும் முன் முழு லாக் டவுன் பிறப்பிக்கப்பட்டது. அங்கும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது மே 11 வரை இந்த லாக் டவுன் நீடிக்கப்பட்டுள்ளது. பயோ பயோ வார் இதனால் ரஷ்யாவில் கொரோனா கேஸ்கள் 2 ஆயிரத்தை கூட தொடாமல் மிகவும் மெதுவாக முன்னேறி வந்தது. இதனால் ரஷ்யா எப்படியும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளும் என்றுதான் நினைத்தார்கள். அதே சமயம் இன்னொரு பக்கம் ரஷ்யாவிற்கு எதிராக நிறைய சந்தேகங்களும் வைக்கப்பட்டது. ரஷ்யாவில் மட்டும் இந்த வைரஸ் பெரிய அளவில் வேலையை காட்டவில்லை. என்ன காரணமாக என்று கேள்வி எழுந்தது. முதலில் இந்த வைரஸ் தாக்குதல் ஒரு பயோ வார் என்று சந்தேகிக்கப்பட்டது. அமெரிக்கா அமெரிக்கா சந்தேகம் அமெரிக்கா, சீனாவிற்கு எதிராக ஏதாவது ஒரு நாடு இந்த போரை துவங்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது. முக்கியமாக ரஷ்யாவே இந்த போரை துவங்கி இருக்கலாம். சீனாவின் வளர்ச்சியை தடுக்க ரஷ்யா இப்படி செய்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. பொதுவாக உலகில் என்ன நடந்தாலும் ரஷ்யா மீதோ சீனா மீதோ பழியை போடுவதுதான் அமெரிக்காவின் முதல் வேலை. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா தொடக்கத்தில் சந்தேகம் அடைந்தது. ரஷ்யாவின் அரசியல் ரஷ்யா எப்படி ரஷ்யாவும் பல வருடங்களாக பயோ ஆராய்ச்சிகளை செய்து வருவதால், கொரோனா வைரஸை ரஷ்யா உருவாக்கி இருக்குமோ என்று சந்தேகம் எழுந்தது. அமெரிக்காவையும், சீனாவையும் கட்டுப்படுத்தும் பொருட்டு ரஷ்யா இப்படி வைரசை வெளியிட்டு பயோ வார் தொடுத்து இருக்குமோ என்று அமெரிக்காவை சேர்ந்து சிலர் கூட அச்சம் தெரிவித்தார்கள். ரஷ்யாவும் கொரோனா வைரஸ் குறித்து எதுவும் பேசாமல் நாளுக்கு நாள் அமைதியாக இருந்தது. சந்தேகம் சந்தேகம் வலுத்தது இதனால் ரஷ்யா மீது கடுமையான சந்தேகங்கள் எழுந்தது. ஆனால் ரஷ்யா போக போக கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவால் தீவிரமாக பாதிக்க தொடங்கியது. ஏப்ரல் 15ம் தேதி வரை அங்கு 10 ஆயிரத்தை கூட கொரோனா பாதிப்பு தொடவில்லை. ஆனால ஏப்ரல் 15ம் தேதி ஒரே நாளில் மொத்தம் 3500 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதன்பின் தினமும் சராசரியாக 4000 என்ற விகிதத்தில் கேஸ்கள் அதிகரித்த வண்ணம் இருந்தது. சந்தேகம் இல்லை இனி சந்தேகம் இல்லை அதன்பின் எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ரஷ்யாவில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரே நாளில் 6500 கேஸ்கள் வந்தது. அதில் இருந்து சரசர என்று வேகமாக கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கியது. தினமும் சராசரி எண்ணிக்கை 5900 என்ற எண்ணிக்கையை அடைந்தது. இதனால் அமெரிக்காவிற்கு ரஷ்யா மீது இருந்த சந்தேகம் போனது. ரஷ்யாவிற்கும் கொரோனாவிற்கும் எதுவும் சம்பந்தம் இல்லை என்று அமெரிக்கா உறுதியானது. இணைந்தது ரஷ்யாவுடன் இணைந்தது அதே சமயம் ரஷ்யா கொரோனா பாதிப்பில் அமெரிக்காவிற்கு உதவி செய்வதாகவும் அறிவித்தது. இரண்டு நாடுகளும் மாற்றி மாற்றி உதவி செய்வதாக முடிவு எடுக்கப்பட்டது. கொரோனாவை இரண்டு நாடுகளும் சேர்ந்து எதிர்கொள்வதாக முடிவு செய்யப்பட்டது. இத்தனை வருடங்களுக்கு பிறகு கொரோனா இந்த இரண்டு நாடுகளையும் ஒன்று சேர்த்து உள்ளது. ரஷ்யா அமெரிக்காவிற்கு மருத்துவ உதவிகளை செய்ய முடிவெடுத்துள்ளது. ஆனால் மோசமாகும் நிலை இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரஷ்யாவிலும் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.கடந்த வாரம் முழுக்க தினமும் 7000 என்று விகிதத்தில் வேகமாக கொரோனா பரவி வந்தது. ஆனால திடீர் என்று நேற்று ஒரே நாளில் 10022 பேர் கொரோனா காரணமாக ரஷ்யாவில் பாதிக்கப்பட்டார்கள். ஒரே நாளில் ரஷ்யாவை கொரோனா புரட்டிபோட்டுள்ளது. லாக் டவுன் இருந்தும் கூட இதுதான் அங்கு தற்போது நிலை. தற்போது கொரோனா பாதிப்பு ஏற்படும் வேகம் அமெரிக்காவிற்கு இணையாக ரஷ்யாவிலும் அதிகரித்துள்ளது. மொத்தம் மொத்தம் எத்தனை இதனால் ரஷ்யாவில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 124054 பேர் என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது. 1222 பேர் அங்கு இதுவரை பலியாகி உள்ளனர். மாஸ்கோவில் மட்டும் மொத்த மக்கள் தொகையில் 20% பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தமாக அங்கு வெறும் 9 நாளில் 70 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இரட்டிப்பு ஆகும் வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அடுத்த நாடு அடுத்த நாடு ரஷ்யா முக்கியமாக ரஷ்ய பிரதமருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் மிகாய்ல் மிஷுஸ்டின் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டது உறுதியாகி உள்ளது.தற்போது மிகாய்ல் மிஷுஸ்டின் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார். இதனால் அந்நாட்டு துணை பிரதமர் ஆண்ட்ரே பெலோசாவ் அங்கு பிரதமரின் பணிகளை கவனித்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இடைப்பட்ட காலத்தில் அதிபர் புடினை சந்தித்தாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த நிலையில் அதிபர் புடின் தற்போது அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோல் பிரதமருக்கு எப்படி கொரோனா வந்தது என்பதும் உறுதியாகவில்லை. உளவு உளவு நாடு இதனால் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் மோசமாக பாதிக்கப்படும் நாடாக ரஷ்யா உருவெடுக்க தொடங்கி உள்ளது. உலகின் அடுத்த எபிசென்டராக ரஷ்யா மாறும் என்கிறார்கள். உளவாளிகள் நாடு என்று அழைக்கப்படுவது ரஷ்யா. ரஷ்யாவின் அதிபர் புடின் கூட ஒரு காலத்தில் உளவாளிதான். உலகம் முழுக்க ரஷ்யாவிற்கு உளவாளிகள் இருக்கிறார்கள். ஆனாலும் கூட ரஷ்யா இந்த கொரோனா தாக்குதலை கணிக்காமல் போனது எப்படி, கொரோனாவிடம் தோல்வி அடைந்தது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது Fallow our page fore new world news #SL_TAMIL_MUSLIM_TV_NETWORK