Saturday 8 January 2022

கட்டாய வழிப்பறி செய்தால் குண்டர் சட்டம்! திருநங்கைகளுக்கு எஸ்.பி எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திருநங்கைகளுக்கான மறுவாழ்வு விழிப்புணர்வு உள்ளரங்க கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எஸ்பி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டனர்.  கூட்டத்தில் பேசிய எஸ்பி, "பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம்  திருநங்கைகள் கட்டாய பணம் வசூலிப்பது குற்றமாகும். பக்தர்கள் விரும்பி கொடுக்கும் பணத்தை பெறாமல் அவர்களை மிரட்டி அதிகபணம் பிடுங்குவதாக தொடர் புகார்கள் வருவது கவலையை ஏற்படுத்துகிறது.எனவே பழனிக்கு வரும் பக்தர்களை திருநங்கைகள் சூழ்ந்துகொண்டு மிரட்டும்வகையில் பணம் பறித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dindigul-sp-warns-transgender-people-not-to-force-people-for-money-379190

No comments: