ஏர் இந்தியாவை, திரு. JRD டாட்டா தொடங்கி இருந்த சமயம் அது. மூன்று வருடத்தில், இம்பீரியல் ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் ஆகியோர் இது எப்படி இவ்வளவு திறமையாக நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆள் அனுப்பினார்கள். ஆனால் அப்படி திறமையாக ஒருவர் நடத்தினால் நமக்கு பிடிக்காதோ என்னமோ, அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் அப்படிப்பட்ட நிறுவனத்தை தேசியமயமாக்கி விட்டார். உடன் திரு. JRD டாட்டா அவர்கள் பிரதமரை சந்தித்து இப்போது இலாபம் ஈட்டிவரும் இந்த நிறுவனம் அரசின் பல தவறான கொள்கைகளால் தொடர்ந்து எப்படி இலாபம் ஈட்ட முடியும் என்று கேட்டிருக்கிறார்.
source https://zeenews.india.com/tamil/business-news/what-isha-foundation-sadhguru-says-about-disinvestment-of-public-sector-357162
No comments:
Post a Comment